114. ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)
மக்கீ, வசனங்கள்: 6
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
114:1
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2
مَلِكِ النَّاسِۙ
(அவனே) மனிதர்களின் அரசன்;
114:3
اِلٰهِ النَّاسِۙ
(அவனே) மனிதர்களின் நாயன்.
114:4
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ الْخَـنَّاسِ ۙ
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
114:5
الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
114:6
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.


Leave your comment