Loading…
  • admin
  • March 2, 2026

113. ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)

113. ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)

மக்கீ, வசனங்கள்: 5

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

113:1

قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ‏

(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

113:2

مِنْ شَرِّ مَا خَلَقَۙ‏

அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-

113:3

وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏

இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

113:4

وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ‏

இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

113:5

وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ‏

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).  

Leave your comment

Search Filter

Browse Categories

Loading categories...

Post Your Ads Now!

Top